நூல் அறிமுகம் - ஜி.மஞ்சுளா
ஆரம்பத்தில் இயந்திரங்களை உடைத்து தங்கள் கோபத்தை வெளிப்படுத்திய தொழிலாளர்கள் பிற்காலத்தில் முறையாக சங்கம் அமைக்க கற்றுக் கொண்டு போராடினர். 1836ல் தொழிலாளர்கள் அரசியல் உரிமை பெறுவதற்கான சாசன இயக்கமும் தோன்றியது. தனித்தனி முதலாளிகளை எதிர்த்து தனித்தனி தொழிலாளர்களாக அல்லது தொழிலாளர் குழுக்களாக போராடி வந்த தொழிலாளிவர்க்கம் முழுவதுமாக கிளர்ந்து எழுந்து முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்தையே பிரதானமாக தாக்க தொடங்கியது இந்த இயக்கத்தின் சிறப்பு என இந்த இயக்கத்தை எங்கெல்ஸ் மதிப்பிட்டார்.
![]() |
| சாசன இயக்கம் |
இன்றும் கூட முதலாளிகள் தங்களை சுரண்டுகின்றர் என்பதை பல தொழிலாளர்கள் உணர்ந்துள்ளனர். அரசியல்ரீதியாக முதலாளித்துவ சட்டங்களை எதிர்த்து போராடி வருகின்றனர். ஆனால் பொதுவில் தொழிலாளர்கள் உள்ளிட்ட சாமான்ய மக்களாகிய நாம் அனைவருமே தொழிலில் வரும் இலாபத்தை முதலாளி எடுத்து கொள்வதை நியாயமானதாகவே கருதுகிறோம்.
ஏனெனில், தொழிற்சாலைக்கான இடம், உற்பத்தி சாதனங்கள் அனைத்திற்குமான மூலதனத்தை முதலாளி தான் போட்டு தொழில் துவங்கி தொழிலாளர்களுக்கு வேலை அளிக்கிறார். இதுவே பெரும் சேவை அல்லவா? முதலாளி இலாபத்தை எடுத்து கொள்வது நியாயமானது தானே? என மிக நியாய உணர்வோடு நாம் நினைத்து கொண்டிருக்கும் அப்பாவித்தனத்தை தான் மார்க்ஸ் தனது 'உபரி மதிப்பு' கோட்பாடு மூலம் உடைத்து நொறுக்கி விடுகிறார்.
மார்க்சின் அந்த 'உபரி மதிப்பு' கோட்பாடு பற்றிய மார்ச்சிய அரசியல் பொருளாதாரத்தை பற்றி சுருக்கமாக ஒரே பத்தியில் அதேசமயத்தில் மிகத் தெளிவாக இந்நூல் எடுத்துரைக்கிறது. உதாரணத்திற்கு, எட்டு மணி நேரம் உழைக்கும் ஒரு தொழிலாளிக்கு 2மணி நேர உழைப்பிற்கு நிகராக கூலி கொடுக்கப்படுகிறது. மீத 6மணி நேரம் ஊதியம் பெறாமல் அல்லது தரப்படாமல் உழைக்கிறார். அதுவே உபரி மதிப்பு. அந்த உபரியே இலாபத்தின் தோற்றுவாய். இந்த உபரி மதிப்பே மூலதனமாக திரள்கிறது. என விளக்கப்படுகிறது. இதிலிருந்து முதலாளியிள் இலாபம் என்பது கொடுக்கப்படாத கூலி தான். அதாவது, முதலாளி தொழிலாளியின் உழைப்பை சுரண்டி திருடிக் கொள்கிறார் என்பதை நாம் தெரிந்துக் கொள்கிறோம்.
எல்லாம் சரி. 2மணி நேரத்திற்கான உழைப்பிற்கு மட்டுமே கூலி கொடுக்கப்பட்டு மீதி நேரத்திற்கானதை முதலாளிகள் இலாபமாக்கி கொள்கின்றனர் என்பதை எப்படி சொல்கிறீர்கள்? என்ற கேள்வி உங்களுக்கு எழுமானால் அது நியாயமானது தான்.
ஆனால் கேள்விக்கான பதிலை ஓரிரு வரிகளில் விளக்கி விட முடியாது. அதற்காக தான் மார்க்சிய பொருளாதாரத்தை விரிவாக கற்க வேண்டும் என்பதை நூலாசிரியர் பல இடங்களில் வலியுறுத்தி கூறுகிறார்.
அனைத்து பொருட்களுமே மனிதர்களால் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் தங்கமும், இரும்பும் ஏன் வெவ்வேறு மதிப்புடையதாக இருக்கிறது? தங்கம் இரும்பை விட பளபளப்பாக நீண்ட காலம் நீடித்திருக்கும் பண்பை பெற்றிருப்பதால் அதன் மதிப்பு வேறுபடுவதாக நாம் கருதுகிறோம். ஆனால் மார்க்சிய பொருளாதாரம் இந்த கருத்தை மறுத்து மாற்று கருத்தை முன்வைக்கிறது.
ஒரு பொருளில் (பண்டத்தில்) செலுத்தப்பட்டுள்ள உழைப்பின் மதிப்பை பொறுத்தே அப்பொருளின் மதிப்பு உருவாகிறது. இதை மார்க்சுக்கு முன்பே ஆடம்ஸ்மித் போன்ற பொருளாதார நிபுணர்கள் கூறிவிட்டார்கள்.
ஆனால்
அப்பொருளில் அடங்கியுள்ள உழைப்பின் மதிப்பை எப்படி அளவிடுவது?
உற்பத்தி செய்வதற்காக செலவழிக்கப்பட்ட 'சமூக வழியில் அவசியமான உழைப்பு நேரத்தின் அளவை' கொண்டே அந்த உழைப்பின் மதிப்பு
நிர்ணயிக்கப்படுகிறது என மார்க்ஸ் ஆராய்ந்து தெளிவு படுத்துகிறார்.
இரும்பை உருவாக்க செலவழிக்கப்பட்ட சமூக
வழியில் அவசியமான உழைப்பு நேரத்தை விட தங்கத்திற்கு அதிக உழைப்பு நேரம்
செலவிடப்பட்டுள்ளதன் காரணமாகவே தங்கம் அதிக மதிப்புடையதாக இருக்கிறது.
சரி, இதை தெரிந்து கொண்டு நாம் என்ன செய்ய போகிறோம்? இது மட்டுமல்ல. மார்க்சிய பொருளாதாரத்தின் இதை போன்ற இன்னும் பலவற்றை நாம் கற்றால் தான், முதலாளித்துவ உற்பத்தி முறை பற்றியும், கூலி உயர்வுக்காக மட்டுமல்ல. கூலியடிமை முறையான இந்த முதலாளித்துவ சமூகத்தையே மாற்ற வேண்டும் என்பதன் அவசியத்தை முழுமையாக புரிந்து கொள்ள இயலும்.
அதனால் தான் மிகவும் அடிப்படையானவற்றை சுருக்கமாக கூறும் நூலாசிரியர், இங்கே இதை தெரிந்து கொண்டால் போதும் என நம்மை ஆற்றுபடுத்தி, அதேசமயத்தில் வகுப்புகளில் மீண்டும் கவனமாக விரிவாக படிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறார்.
பணமும் மூலதனமும் ஒன்றல்ல.
உபரி மதிப்பே மூலதனமாக திரள்கிறது.
மூலதனம் சிறிய உற்பத்தியாளர்களையும் போட்டி
முதலாளிகளையும் ஒழித்து ஏகபோகமாகிறது.
முதலாளித்துவ சமூகத்தில் உற்பத்தி சமூகமயமாக உள்ளது. ஆனால் வினியோகம் தனியுடைமையாக சிலரிடம் செல்கிறது. இதுவே அடிப்படை முரண்பாடு. இந்த முரண்பாட்டை சட்டபூர்வமான முறையில் தீர்க்க முடியாது என்பதையும் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரமே தீர்வு என்பதையும் மார்க்சியம் விளக்குகிறது.
போட்டியும், மிகை
உற்பத்தியும் கொண்டதே முதலாளித்துவ உற்பத்தி முறை என பலவற்றை சுருக்கமாக சொல்லிச்
செல்லும் நூலாசிரியர் இறுதியில் முதலாளித்துவத்தின் தோல்வி தள்ளி போகலாம், ஆனால்
முதலாளிகளை உழைப்பு தூக்கி எறிவது தவிர்க்க முடியாதது என நம்பிக்கையூட்டி
முடிக்கிறார்.
அரசியல் பொருளாதாரம் என்பது பொருளாதார மேதாவிகளுக்கு மட்டுமல்ல. அதை நாம் ஒவ்வொருவரும் அவசியம் கற்றுணர வேண்டும். அதேசமயத்தில் அதை கற்க உழைப்பையும் செலவிட வேண்டும் என்பதை தோழர் அ.கா.ஈஸ்வரனின் எழுத்துக்கள் சொல்லாமல் சொல்லி செல்கிறது.
அடுத்து சோசலிசம் குறித்து









